முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மல்கொட்டாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலை கடை:கலெக்டர் சி.அ.ராமன், திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கீழ்கொத்தூர் ஊராட்சி கும்மல்கொட்டாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கலெக்டர்ஸ சி.அ.ராமன், திறந்து வைத்தார்.அணைக்கட்டு வட்டம் கும்மல்கொட்டாய் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தமிழக அரசால் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பொருட்களை பெறுவதற்காக மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீழ்கொத்தூர் நியாய விலை கடைக்கு சென்று வாங்க வேண்டிய நிலை இருந்தது. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி கும்மல்கொட்டாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலை கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று கும்மல்கொட்டாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன்,திறந்து வைத்தார். இந்த பகுதிநேர நியாய விலை கடையில் 202 குடும்ப அட்டைகள் கீழ்கொத்தூர் தாய் நியாய விலை கடையிலிருந்து சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப அட்டைதாரகளுக்கு பொது விநியோக திட்டத்தில் பொருட்களை மாவட்ட ஆட்சிதலைவர் சி.அ.ராமன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,ஆவின் தலைவர் வேலழகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் வேனுசெகரன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ஆனந்தன், அணைக்கட்டு வட்டாச்சியர் உஷாராணி, வட்ட வழங்க அலுவலர் கோட்டீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்