எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏழை_பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவருமே நம் நாட்டின் சொத்து என்றால் அது மிகையாகாது என ஊட்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் நீலகிரி கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பேசினார்.
உயிரிழப்புகளை தடுப்பது
ஊட்டியிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பயிற்சி அரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். மாவட்ட எஸ்.பிமுரளி ரம்பா முன்னிலை வகித்து பேசினார். கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-
இந்த கருத்தரங்கின் நோக்கமே விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதுதான். ஏனென்றால் இந்த நாட்டினுடைய ஒவ்வொரு படைப்புக்கும் காரணம் ஆண்டவன். கடவுளின் படைப்பை எடுப்பதற்கும், அழிப்பதற்கும் யாருக்குமே சட்டத்தில் இடமில்லை. அதேபோல் ஒவ்வொரு உயிரும் நம் நாட்டின் சிறப்பு. அது யாராக இருந்தாலும். அதாவது ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவருமே நம் நாட்டின் சொத்து என்றால் அது மிகையாகாது. அந்த சொத்தை பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என்பதை மறந்துவிடக்கூடாது.
கவனத்துடன் செயல்பட வேண்டும்
உலகளவில் வாகன விபத்துக்களை கணக்கெடுத்தால் இந்தியாவில் தான் அதிகமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகப்படியான விபத்துக்கள் நடப்பதில் முதலிடம் வகிக்கின்றது. எனவே இது சிந்திக்க வேண்டிய நேரமிது. பேருந்து ஓட்டுநர்களை நம்பி 50 பேர் பேருந்தில் பயணிக்கின்றனர். அந்த 50 பேரையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே வாகனங்களை ஓட்டும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் 2014ம் ஆண்டு 61,688 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் 15,190 பேர் இறந்துள்ளனர். 2015ம் ஆண்டில் 69,059 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் இறந்தவர்கள் 14,642 பேர். இதை கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 42 பேர் விபத்துக்களினால் உயிர்களை பலிகொடுக்கின்றனர்.
மனித தவறுகள்
நமது மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 250 முதல் 300 விபத்துக்கள் நடக்கின்றன. இதில் சராசரியாக 30 முதல் 35 பேர் வரை இறந்து கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது உயிர்களை காக்க வேண்டிய தருணம் அதிகமாக உள்ளது.கடைசியாக உயிரிழப்புகளை தடுக்கவாவது நாம் முயல வேண்டும். விபத்துக்கு காரணம் மனித தவறுகள் தான். அதற்காகத்தான் இந்த கருத்தரங்கு கூடியுள்ளது. எனவே வாகனங்களை ஒட்டும்போது தொலைபேசியை பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தோடு வாகனம் ஓட்டுவது, சிக்னலை கவனிக்காமல் செல்வது போன்றவைகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசு விபத்தை தடுப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாள்கிறது. அதில் ஒன்றுதான் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த இக்கருத்தரங்குகள். இதன் மூலமாக மக்களின் மனதில் மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தவிர்க்க முடியும். இவ்வாறு கலெக்டர் பொ.சங்கர் பேசினார்.
கருத்தரங்கில் ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் மோரீஸ் சாந்தா குரூஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பொ) டாக்டர் இரியன் ரவிக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியக்குமார், டிராவல்ஸ் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலக தட்டச்சர் சக்திவேல் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் பவர்பாயிண்ட் மூலம் ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு மற்றும் வாகன பராமரிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.