முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் மக்கள் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறும் சைக்கிள் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ தங்கதுரை பேச்சு.

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரில் உள்ள திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்சிலுவை பெண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை நந்தினி வரவேற்றார் தலைமை ஆசிரியர் ஞானம் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை இப்பள்ளியை சேர்ந்த 103 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் அம்மாவின் ஆசியுடன்  பொதுச் செயலாளர் சின்னம்மா துணை பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோ£ ஆசியுடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முத்தாய்ப்பாக இன்று 103 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிலர் பேசுவது வேதனையளிக்கிறது. அம்மாவை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு தொடர்ந்து ஐந்தாண்டுகள் வரை அரசின் மொத்த திட்டங்களும் முறையாக வழங்கப்படும் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுத்துவோம் என்று கூறினார்.

அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், தொகுதி கழக செயலாளர் கனகதுரை, நகர செயலாளர் பீர்முகமது, ஒன்றிய மீனவரணி செயலாளர் ரத்தினம், எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் அழகுமலை, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ¢, துணை தலைவர் வெங்கடேஷ், அதிமுக நிர்வாகிகள் சண்முகம், குமரேசன், கிருபாகரன், பாண்டிராதா, ராஜா, நாகராஜ், ஜான்சிராணிசெல்வம் உள்பட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்