முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழப்பாவூரில் புதிய பயணிகள் நிழற்குடை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      கன்னியாகுமரி

தென்காசி,

கீழப்பாவூரில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்.கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ரூ.9.95 செலவில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை, முகப்பு வளைவு ஆகியன  திறப்பு விழா நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமை வகித்து, திறந்து வைத்தார். பேரூராட்சி நிர்வாக அதிகாரி தேவராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள்  பாசறை மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டி, பேரூர் செயலாளர் பாஸ்கர்,பேச்சாளர்  தீப்பொறி அப்பாத்துரை, மேலவைப் பிரதிநிதகள்  , ஜெயராமன்,வி.கே.கணபதி மதியழகன்,அரசு ஒப்பந்தக்காரர் சண்முகவேலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்