முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யும் குடிநீர் திட்டப்பணிகள் : கலெக்டர் கோவிந்தராஜ் செய்தியாளர்களுடன் ஆய்வு

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் காசிபாளையம் மற்றும் விஸ்வநாதபுரி அண்ணாநகர் காலனி பகுதியில் பொதுமக்கள் நீண்டநாள் குடிநீர் தேவையென்று கோரிக்கை வைத்ததையொட்டி மாற்று ஏற்பாடு செய்யும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:ஊரக வளர்ச்சித்துறை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், ஊராட்சி செயலர் ஆகியோரை நேரில் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று குடிநீர் பற்றாக்குறையை நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மேடான பகுதியில் குடிநீர் செல்லாத இடங்களில் தாழ்வான பகுதியாக மாற்றி குழாய்களை பதித்து குடிநீர் வழங்கவும், அமராவதி ஆற்றுப்பகுதியில் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணற்றினை சுத்தப்படுத்தி தூர்வாரி அதிக அளவில் நீர் வரும் அளவிற்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பகுதி வரையுள்ள குடிநீர் பாதைகளிலுள்ள பழுதுகளை நீக்கி தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், உதவி செயற்பொறியாளர் மீனாகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உலகநாதன், தண்டபானி, உதவி பொறியாளர்கள் சரவணன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்