முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

ஜெனீவா  - சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர். ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது.

சரமாரி துப்பாக்கிச்சூடு
சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ரோட்டின் மீது ஒரு உணவு விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் அங்கு அதிகம் பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது, அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். திடீரெனயாரும் எதிர்பார்க்காத போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

2 பேர் பரிதாப பலி
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்.  ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உயிர் ஊசலாடுவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை
இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் அருகேயுள்ள ரெயில் நிலையம் நோக்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.  துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது. முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்