முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர சிகிச்சைக்குப் பின் நைஜீரியா ஜனாதிபதி நாடு திரும்பினார்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

கடுனா  - நைஜீரியா ஜனாதிபதி முஹம்மது புகாரி 2 மாத தீவிர சிகிச்சைக்குப் பின் நேற்று நாடு திரும்பினார்.

பிரிட்டன் சென்றார்
நைஜீரியா நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சி புரிந்து வரும் முஹம்மது புகாரி(74) கடந்த ஜனவரி 19-ம் தேதி சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார். 10 நாட்கள் சிகிச்சைக்காக சென்ற புகாரி மருத்துவர்கள் ஆலோசனை காரணமாக, சுமார் 2 மாதங்கள்( மார்ச் 9) தனது சிகிச்சையை நீட்டித்தார்.

நாடு திரும்பினார்
இந்த நிலையில், 2 மாத தீவிர சிகிச்சைக்குப் பின் ஜனாதிபதி முஹம்மது புகாரி இன்று நைஜீரியா திரும்பியுள்ளார். இதனை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரின் உடல் நிலை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.  எனினும், இந்த வார இறுதியில் அவரது புகைப்படம் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்