முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின்  69வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவையின் சார்பில் பாய்ஸ்டவுனில் தங்கி கல்வி பயின்று வரும்ஆதரவற்ற குழந்தைகள் 500பேருக்கு முட்டையுடன் மட்டன் பிரியாணியும் வண்ணச் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின்  69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி முழுவதும் ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர் பயன்பெற்றிடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி பாய்ஸ்டவுனில் தங்கி கல்வி பயின்று வரும் ஆதரவற்ற குழந்தைகள் 500பேருக்கு மதியஉணவாக முட்டையுடன் மட்டன் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன் தலைமை வகித்தார்.முன்னாள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன் வரவேற்று பேசினார்.ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்து திருமங்கலம் பாய்ஸ்டவுனில் தங்கி கல்வி பயின்று வரும் ஆதரவற்ற குழந்தைகள் 500பேருக்கு மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு மதியஉணவாக முட்டையுடன் மட்டன் பிரியாணியும்,வண்ணச் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழச்சியில் முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன், மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கியஅணிச் செயலாளர் திருப்பதி பாண்டியன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,சிவஜோதிதர்மர்,பிச்சைமணி,கள்ளிக்குடி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா,கட்சி நிர்வாகிகள் பிரபுசங்கர்,சாமிநாதன்,இருளப்பன், கூடக்கோவில் முருகன்,தியாகராஜ்,சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன் சிறப்புடன் செய்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்