முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இறந்த இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் நேரில் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

   கடலாடி-  காஷ்மீரில் இறந்த புனவாசல்  இராணுவ வீரரின்   குடும்பத்தினரிடம்  அமைச்சர் எம்.மணிகண்டன் நேரில் ஆறுதல் கூறினார்.       

    இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஏ.புனவாசல் கிராமத்தைச்சேர்ந்த திருக்கண்ணன் என்பவரின் மகன் திருப்பாண்டி (33) இவர் காஷ்மீர் மாநிலம் சம்பா என்னும் பகுதியில் பணியில் இருந்தபோது கடந்த பிப்ரவரி 5ந்தேதி இரவு திடீரென ஏற்பட்ட பணிச்சரிவில் சிக்கி திருப்பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 
   அவரது உடல் அடக்கம் அவரது சொந்த ஊரிலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம்  செய்யப்பட்டன.
   இந்நிலையில் நேற்று 12ந்தேதி புனவாசல் கிராமத்தில் உள்ள  இறந்த இராணு  வீரர் திருப்பாண்டியின் தந்தை திருக்கண்ணனிடமும் இராணுவ வீரரின் மனைவி கனகவள்ளி மற்றும்  தாயாரிடம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
   அப்போது இராணுவ வீரரின் மனைவி கனகவள்ளி அமைச்சர் எம்.மணிகண்டனிடம் அரசு வேலை வழங்குமாறு கேட்டு மனு அளித்தார்.  அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
    இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி- முன்னாள் மாவட்ட சேர்மன் எம்.சுந்தரபாண்டியன்- முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர்.பத்மநாதன்-ஒன்றிய செயலாளர் அந்தோனிராஜ்-ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாடசாமி-வழக்கறிஞர்பிரிவு செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன்-சங்கரபாண்டியன்-பாண்டி-அதிமுக பிரமுகர்கள் வெங்கலகுறிச்சிசெந்தில்- புளியங்குடி முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்