முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் அமைச்சர், எம்.பி. ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      கன்னியாகுமரி

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் முன்னிலையில், சாமிதோப்பு என்ற இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்விதமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், விமான தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.அதனடிப்படையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதின் அடையாளமாக, கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட உப்பளம் மற்றும் அதை சுற்றியுள்ள 830 ஏக்கரில் விமானநிலையம் அமைப்பதற்காக, மத்திய குழு ஏற்கெனவே இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, நடவடிக்கையில் உள்ளது.இதனை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் முன்னிலையில், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, சந்தையடி பாலகிருஷ்ணன், வேல்முருகன், அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், அழகப்பபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுத் தலைவர் ஸ்டீபன், தம்பி தங்கம், நாஞ்சில் சந்திரன், விஜயபாண்டியன், கணபதி பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்