முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் நகராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் திருவள்ளுர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது.திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்,செடிகளை வேருடன் அகற்ற வேண்டும் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்,சீமைக்கருவேல செடிகளை அழிக்கும் பணியினை திருவள்ளுர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் நகர கட்டட வரைபட ஆய்வாளர் லட்சுமி நாராயணன் மேற்பார்வையில் திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட அய்யனார் அவின்யூ,பெரியகுப்பம் உள்ள பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்ததாக நகர கட்டட வரைபட ஆய்வாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்