எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் 5 பணிகள் ரூ.12.33 இலட்சம் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால்களில் 9 பணிகளுக்கு ரூ.31.76 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.44.09 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர் .சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் 14 குடிமராமத்துப் பணிகளை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் குடிமாராமத்துப் பணிகளை துவக்கி வைத்து தெரிவித்தாவது.
தமிழகத்தில் வறட்சியை எதிந்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க ஆணையிட்டார்கள். 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்கள்.
குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பண்டைய காலங்களில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்துக் கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்புடன் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டதால் இத்திட்டம் குடிமராமத்துப் பணிகள் திட்டம் என முன்னோர்களால் அழைக்கப்பட்டது. நீர்வள ஆதாரங்களாக விளங்கும் குளங்கள், ஏரிகள், கால்வாய்களில் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்து நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகளே குடிமராமத்துப் பணிகள் ஆகும். இந்தப் பணிகள் தமிழக அரசால் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 1975ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்த குடிமராமத்துப் பணிகள் திட்டம் நடப்பு ஆண்டில் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 100 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, கோவை மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளை குடிமராமத்துப் பணிகள் மூலம் சீரமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 56 பணிகள் சுமார் 393.29 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கீழ்பவானி பாசனத் திட்டக் கால்வாய்களில் 39 பணிகள் ரூபாய் 321.20 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத் திட்டத்தில் 3 பணிகள் ரூபாய் 28.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 9 பணிகள் ரூபாய் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 5 பணிகள் ரூபாய் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் முதற்கட்டமாக செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கீழ்பவானி முறைநீர்ப்பாசனத்திற்குட்பட்ட 39 பாசன சபைகள் மூலமாகவும், காலிங்கராயன் பாசனத்திற்குட்பட்ட 3 பாசன சங்கங்கள் மூலமாகவும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 10 சங்கங்கள் மூலமாகவும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 5 பாசன சங்கங்கள் மூலமாகவும் சங்கங்களின் பங்களிப்புடன் பாசனதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாய்க்கால் பராமரிப்பு பணிக்கும் மதிப்பீடுகள் ரூபாய் 10.00 இலட்சங்களுக்கும் மிகாமல் பாசனதாரர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டு, வாய்க்காலில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், கால்வாயை தூர்வாருதல், உடைந்துபோன மதகுகளை சீரமைத்தல், மதகுகளுக்கு கதவுகளை சீரமைத்து பொருத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை குடிமராமத்துப் பணிகளாக செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் யு10 பாசனப் பகுதியில் மட்டும் சுமார் 5924-59 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இத்திட்டப் பணிகள் செயலாக்கம் செய்யப்படுவதால் தண்ணீர் கடைமடை வரை சேதாரமின்றி சென்றடையும். ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 56 பணிகள் ரூபாய் 393.39 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடிமராமத்துப் பணிகள் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இதுவே முதல்முறையாகும். கிராமப்புற விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரத்தினை பெருக்குவதற்காக குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வார வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை விரைவில் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் மூலம் விவசாயிகள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் ஈரோடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாச்சலம், பவானிசாகர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன், கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.மோகன்குமார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.