எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் 5 பணிகள் ரூ.12.33 இலட்சம் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால்களில் 9 பணிகளுக்கு ரூ.31.76 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.44.09 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர் .சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் 14 குடிமராமத்துப் பணிகளை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் குடிமாராமத்துப் பணிகளை துவக்கி வைத்து தெரிவித்தாவது.
தமிழகத்தில் வறட்சியை எதிந்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க ஆணையிட்டார்கள். 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்கள்.
குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பண்டைய காலங்களில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்துக் கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்புடன் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டதால் இத்திட்டம் குடிமராமத்துப் பணிகள் திட்டம் என முன்னோர்களால் அழைக்கப்பட்டது. நீர்வள ஆதாரங்களாக விளங்கும் குளங்கள், ஏரிகள், கால்வாய்களில் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்து நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகளே குடிமராமத்துப் பணிகள் ஆகும். இந்தப் பணிகள் தமிழக அரசால் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 1975ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்த குடிமராமத்துப் பணிகள் திட்டம் நடப்பு ஆண்டில் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 100 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, கோவை மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளை குடிமராமத்துப் பணிகள் மூலம் சீரமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 56 பணிகள் சுமார் 393.29 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கீழ்பவானி பாசனத் திட்டக் கால்வாய்களில் 39 பணிகள் ரூபாய் 321.20 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத் திட்டத்தில் 3 பணிகள் ரூபாய் 28.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 9 பணிகள் ரூபாய் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 5 பணிகள் ரூபாய் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் முதற்கட்டமாக செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கீழ்பவானி முறைநீர்ப்பாசனத்திற்குட்பட்ட 39 பாசன சபைகள் மூலமாகவும், காலிங்கராயன் பாசனத்திற்குட்பட்ட 3 பாசன சங்கங்கள் மூலமாகவும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 10 சங்கங்கள் மூலமாகவும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 5 பாசன சங்கங்கள் மூலமாகவும் சங்கங்களின் பங்களிப்புடன் பாசனதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாய்க்கால் பராமரிப்பு பணிக்கும் மதிப்பீடுகள் ரூபாய் 10.00 இலட்சங்களுக்கும் மிகாமல் பாசனதாரர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டு, வாய்க்காலில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், கால்வாயை தூர்வாருதல், உடைந்துபோன மதகுகளை சீரமைத்தல், மதகுகளுக்கு கதவுகளை சீரமைத்து பொருத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை குடிமராமத்துப் பணிகளாக செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் யு10 பாசனப் பகுதியில் மட்டும் சுமார் 5924-59 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இத்திட்டப் பணிகள் செயலாக்கம் செய்யப்படுவதால் தண்ணீர் கடைமடை வரை சேதாரமின்றி சென்றடையும். ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 56 பணிகள் ரூபாய் 393.39 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடிமராமத்துப் பணிகள் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இதுவே முதல்முறையாகும். கிராமப்புற விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரத்தினை பெருக்குவதற்காக குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வார வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை விரைவில் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் மூலம் விவசாயிகள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் ஈரோடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாச்சலம், பவானிசாகர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன், கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.மோகன்குமார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024