முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் மார்ச் 28-இல் குறைகேட்புக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மார்ச் 28-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

  பொதுமக்கள் அஞ்சல் துறை சேவைகள் குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். இது குறித்த புகார்கள் இருந்தால் முதுநிலை கண்காணிப்பாளர், ஈரோடு அஞ்சல் கோட்டம், ஈரோடு-1 என்ற முகவரிக்கு மார்ச் 21-ஆம் தேதிக்குள் புகார் மனுக்களை அனுப்ப வேண்டும். அலுவலக வேலைநாள்களில் தினமும் காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் தங்களது புகார் மனுக்களை நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

  புகார் மனுவில் முழுவிவரம் இருக்க வேண்டும். அஞ்சல் உறையின்மேல் குறைகேட்புக் கூட்ட மனு என குறிப்பிட வேண்டும் என ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஜி.குருநாதன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்