முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாராவில் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரகசிய தகவல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரின் குபுவாரா மாவட்டத்தின் காலாரோஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று காலை கிராமத்தை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஒருவர் காயம்
அப்போது வீடு ஒன்றில் இருந்து பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 3 தீவிரவதாகிள் துப்பாக்கிச்சூடு நடத்தியது உறுதி செய்யப்பட்டது.  தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

3 பேர் சுட்டுக்கொலை
இதனையடுத்து பாதுகாப்பு படை பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதலை கொடுத்தது. இருதரப்பு இடையேயும் துப்பாக்கி சண்டை நீடித்தது. அப்போது மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள்? என்பது அடையாளம் காணப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்