முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா கடற்கரையில் அயர்லாந்து பெண் பிணமாக கண்டெடுப்பு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

பனாஜி  - கோவா கடற்கரையில் அயர்லாந்து நாட்டு பெண் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை ஒருவரைக் கைது செய்துள்ளது.

அயர்லாந்து பெண்
25 வயது மதிக்கத்தக்க அயர்லாந்து நாட்டு பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாலை கோவாவின் தெற்கு கடற்கரையோரம் உள்ள தேவாபேக் கிராமத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தேவாபேக் கிராமத்தின் அருகேயுள்ள கனகோனா கிராமத்தை சேர்ந்த விகாஸ் பகத் என்பவரை கோவா போலீசார் நேற்று கைது செய்தனர்.

பலாத்காரம் ?
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி சம்மி தவரெஸ் கூறுகையில் “ அயர்லாந்து நாட்டு பெண்ணை கடைசியாக ஹோலி பண்டிகையின்போது பார்த்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன் அப்பெண் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இது தொடர்பாக விகாஸ் பகத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். அயர்லாந்து பெண்ணின் மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, அப்பெண்ணின் பிரேதத்தை போலீசார் கோவா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்