முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் : வருகிற 22ம் தேதி நடக்கிறது

புதன்கிழமை, 15 மார்ச் 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்திடலில் வருகிற 22ம் தேதி தடகளம், கையுந்துபந்து (ஆடவர் மற்றும் மகளிர்), கூடைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளது.

பல்வேறு போட்டிகள்

 

போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதிகள்: போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் ஒரு விளையாட்டு நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

மார்ச் 2017-ஆம் மாத மாதாந்திர போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 22.03.2017 அன்று காலை 8.00 மணிக்கு விளையாட்டரங்கத்திற்கு வந்து, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்