எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், காடச்சநல்லூர் மற்றும் எலந்தகுட்டை ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அவர்கள் தலைமையிலான மனுநீதி நாள் முகாம் காடச்சநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காடச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று (15.03.2017) நடைபெற்றது. இம்மனுநீதி நாள் முகாமிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,
அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக மாதந்தோறும் கலெக்டர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தலைமையில் கிராமப்புறங்களில் மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்மனுநீதி நாள் முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றன. மக்களைத்தேடி அரசாங்கம் என்பதுதான் மனுநீதி நாள் முகாமின் முக்கிய நோக்கமாகும். இம்மனுநீதி முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளில் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற திட்டங்கள் குறித்தும் இங்கே தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது பல்வேறு துறைகள் சார்பில் விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பொதுமக்கள் பார்த்துப் பயன்பெறுவதோடு, அரசின் திட்டங்களில் தங்களுக்கு தகுதியான திட்டங்களை அறிந்து அத்தகைய திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். . குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பல்வேறு நோய் தாக்கங்களிலிருந்து பாதுகாத்திட அரசு சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 இலட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டு இதுவரை சுமார் 3.50 இலட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மீதமுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் இதனையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்துடன் கூடிய வளர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்றார். இம்மனுநீதி நாள் முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 149 நபர்களுக்கு ரூ.29.80 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.16,19,190 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், வழங்கல் துறையின் சார்பில் 34 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், வேளாண்மை துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.35,833- மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.40,000- மதிப்பிலான உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் விதைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 22 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வல்வில்சுதேசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தமைக்காக 5 நபர்களுக்கு பங்குத்தொகை சான்றுகளையும் என மொத்தம் 236 பயனாளிகளுக்கு ரூ.46,75,023 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். இம்மனுநீதி நாள் முகாமில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ந.பாலச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இணை இயக்குநர் (வேளாண்மை) ஆர்.கலியராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, உதவி ஆணையர் கலால் புகழேந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இராஜேஸ்வரி, உட்பட பல்வேறு துறை அலுவலர்கள், பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் தனசேகர், காடச்சநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முனியப்பன் உட்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் திட்ட விளக்கவுரையாற்றினர். குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ஆர்.இரகுநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.