முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தோல்வியடைவது உறுதி மல்லை சத்யா பேச்சு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தோல்வியடைவது உறுதி என்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசினார்.
திண்டுக்கல்லில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் என்.செல்வராகவன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்ததாவது
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை 3 அணிகளாக பிளவுபட்டுள்ளதால் பலவீனம் என்று கொள்

       ள தேவையில்லை. தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரைப் பார்த்தாலே அக்கட்சி தோல்வியடைவது உறுதி என்று தெரியவந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் யாரையும் கூட்டணிக்காக அழைக்கவில்லை என்று கூறிய தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தற்போது அனைத்து கட்சிகளையும் ஆதரவுக்கு அழைத்து வருகிறது. எப்போதும் வீராவேசத்துடனும், ஆணவத்துடனும் பேசும் மு.க.ஸ்டாலின் தற்போதைய பேச்சிலிருந்தே தி.மு.க.வின் தோல்வி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ம.தி.மு.க.வின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து திருச்சியில் வரும் 18ம் தேதி நடைபெறும் உயர்நிலைக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் நேரடியாகவோ, மறைமுகவோ ம.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தல் என்பது உள்ளூர் பிரச்சனைகளை மையப்படுத்தியே வெற்றி, தோல்வியை முடிவு செய்யும். ஆனால் அதே வேளையில் அரசியல் கட்சிகளின் பலமும் அவசியம். ம.தி.மு.க. நிர்வாகிகள் வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் குறித்து அறிந்து அதனை எடுத்துக்கூறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்