முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊதிய உயர்வு பிரச்னையில் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள், தங்களது ஊதியத்தை உயர்த்தக்கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த மருத்துவமனையில்,

தங்களது ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டுமென கோரி அங்கு பணிபுரியும் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரை அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், நேற்று தங்களது பணிகளை புறக்கணித்துவிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்களின்றி பணிகள் நடைபெறுகின்றன. இதனால், அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்