முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு இன்று பதவி ஏற்கிறார்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

டேராடூன்  - உத்தரகாண்ட் மாநிலத்தில் அமையவுள்ள பா.ஜ.க ஆட்சியின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வாகியுள்ளார். அவர் இன்று முதல்வராக பதவியேற்கிறார்.

பா.ஜ.க வெற்றி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது. இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான ஆளும்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் ஆளும்கட்சி சட்டமன்ற தலைவராகவும், முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பதவியேற்கிறார்
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக இன்று அவர் பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலர் டேராடூன் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்