முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரின் புல்வமாவில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - ஜம்மு காஷ்மீரின் புல்வமாவில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

தேடுதல் வேட்டை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடைய  கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. புல்வமாவா மாவட்டத்தில் உள்ள பட்னூர் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தப்பி ஓடினர்
அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடவே பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். நேற்று அதிகாலை 2.40 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சண்டை சில மணி நேரம் நீடித்தது. அதிகாலைவேளை என்பதால் நிலவிய இருட்டை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாக தெரிகிறது. எத்தனை பயங்கரவாதிகள் இருந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்