முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக ஆர்.கே.ரவிச்சந்திரன் தேர்வு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக ஆர்.கே.ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த ஞிதிமன்ற வளாகத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக ஆர்.சுரேஷ்குமார் செயல்பட்டார். காலை முதலே வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மொத்தம் 540 வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து மாலை வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இதில் தலைவராக ஆர்.கே.ரவிச்சந்திரன் 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.வி.பாண்டியராஜன் 204 வாக்குகளும், டி.ரவிச்சந்திரன் 98 வாக்குகளும் பெற்றனர்.

செயலாளர் பதவிக்கு போட்டியிட்டதில் வி.கிருஷ்ணன் 51 வாக்குகளும், ஆர்.ரமேஷ் பிரபு 170 வாக்குகளும், ஆனந்தமுனியராஜன் 315 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து செயலாளராக ஆனந்த முனியராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் எம்.சிவக்குமார் 320 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.கே.அன்புச்செழியன் 196 வாக்குகளைப் பெற்றார். துணைச் செயலாளராக குமரேசன், பொருளாளராக உமாவதியும் போட்டியின்றி தேர்வு பெற்றனர். மேலும் 15 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்