முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி தங்கியிருந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து !

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி  - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

அரையிறுதி போட்டி
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள துவாரகா பகுதியில் நேற்று மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் ‘ஹசாரே சுழற்கோப்பை’ அரையிறுதி கிரிக்கெட் போட்டி நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலத்துக்கு வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் துவாரகா பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பயங்கர தீ விபத்து
நேற்று காலை சுமார் 9 மணியளவில் இந்த ஓட்டலின் ஒருபகுதியில் பற்றிய தீ, மளமளவென அங்கிருந்த அறைகளுக்கு பரவியது. இதனால், அங்கு தங்கியிந்த அனைவரும் பீதியடைந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துவந்த மீட்புப் படையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

போட்டி ஒத்திவைப்பு
தொடர்ந்து அங்கு கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கான பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை. இந்த விபத்தை தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான ‘ஹசாரே சுழற்கோப்பை’ அரையிறுதி கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்