முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத தாக்குதலில் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது: பாகிஸ்தான்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை, மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்தது உள்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்று பாகிஸ்தான் வேதம் ஓதுகிறது.

மும்பையில் இந்தியா டூடே சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் உள்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். இந்தமாதிரியான வழக்குகள் முடிவதற்கு காலதாமதமாகும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை  பாகிஸ்தானியர்கள்தான் நடத்தினர் என்று இந்திய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் முடிவதற்கு காலதாமதமாகும். இந்த வழக்குகளில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எங்கள் அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.   குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் என்று பின்னர் பேட்டி அளித்த பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் கூறினார்.

அதேசமயத்தில் தீவிரவாத தாக்குதல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதி கிடைக்க இருநாடுகளிடையே ஒத்துழைப்பு வேண்டும்.  கடந்த 2007-ம் ஆண்டு நடந்த சமஜ்ஹெதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பாக இன்னும் யாரும் மீதும் வழக்கு தொடரப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் பசித் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமான நிலையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கு விசாரணையில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் பசித் கூறினார்.

பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இல்லை என்றும் பாகிஸ்தானும் தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது என்றும் கலந்துரையாடலின்போது பசீத் பொடிவைத்து பேசினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago