முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் தின விழாவில் மகளிர்களுக்கு சிறப்பு பரிசு

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டிவி சினிமா நடிகர் ஜெ.சந்தானம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மகளிர் சுயஉதவி

 

உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியிலுள்ள 150 மகளிர் சுயஉதவி குழு பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் சுயஉதவி குழுவினர்களுக்கு சுய தொழில்கள் பயிற்சி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

 

மேலும் கூட்டத்தில் தனி நபர் இல்லக்கழிவறையின் அவசியம் குறித்தும், குப்பைகளை மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரித்து வழங்குதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் தவிர்த்து சுற்றுப் புற சூழலை பாதுகாத்தல், உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளில் வழங்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கப்படும் மகளிர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர்கள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மகளிர்களை கொளரவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் சுய உதவிக்குழு மகளிர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்