எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர்டி.பி.ராஜேஷ், மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிகை தொழிற்பயிற்சி மையத்தில் கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுவாழ்வு திட்டம் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மேலும், தொழில்துறை அமைச்சர் 39 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான நேரடி கடன்களை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் , இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தை முழு சுகாதாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்கும் நோக்கத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படும் நல்லூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்ககோயில் மற்றும் மங்கள+ர் ஊராட்சி ஒன்றியங்களில் 18 களப்பகுதிகளில் உள்ள 18 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் மாதிரி சுகாதார கழிப்பறை அமைக்க தலா ரூ.30500- வீதம் மொத்தம் ரூ.5.49 இலட்சத்தை 18 ஊராட்சிகளுக்கு வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் கடலூர் மாவட்டம் மாளிகைமேட்டை சேர்ந்த செல்வன் சக்திவேல் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.2000- மதிப்பிலான கழுத்து உதவி உபகரணத்தை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றியாதாவது, விருத்தாச்சலம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஒன்றியங்களை உள்ளடக்கி நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 2126 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். இம்முகாமில் 24 தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த வேலை வழங்கும் நிறுவனங்கள் மூலம் 967 இளைஞர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் 326 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமிற்காக தமிழக அரசு ரூ.1 இலட்சம் செலவிட்டுள்ளது. இன்று பணி நியமன ஆணை பெறும் இளைஞர்கள் அனைவரும் சம்பளத்தைப்பற்றி கவலைப்படாமல் மிகவும் பொறுப்போடு தங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனத்தின் முன்னேற்ற்திற்காக உழைக்கவேண்டும். சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு திட்டத்தின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அரசு இந்த அரசாகும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தற்பொழுது ரூ.18000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.1001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் படித்த இருபால் இளைஞர்களும் தங்கள் வேலை தொடர்பான தேடுதலை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முதலில் சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவதை ஒரு படியாக நினைத்து கடினமாக உழைத்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து அதிக சம்பளம் வழங்கும் நல்ல நிறுவனங்களை தேடி பணியாற்றவேண்டும். தொழில்துறையின் மூலம் 2017-18ம் ஆண்டில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பாகம் தயாரிப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழக அரசு மனித வளத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இன்று பணி நியமன ஆணைகளை பெறும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்காத மற்ற இளைஞர்களுக்கு அரசின் மூலம் அடுத்த வாய்ப்பினை உருவாக்கி தருவேன் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்கலெக்டர் பேசியதாவது,நமது நாட்டில் இந்தியாவிலேயே பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த வளர்ச்சியில் படித்த இளைஞர்கள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள். இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், சுய தொழில் தொடங்குவதற்காகவும் மறைந்த முதலமைச்சர் அவர்களால் Nநுநுனுளு திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் வீட்டில் இருக்காமல் வேலைவாய்ப்பினை தேடவேண்டும். மகளிர் திட்டம் மூலமாகவும், புதுவாழ்வு திட்டம் மூலம் பலவிதமான பயிற்சி அளிக்கிறார்கள். இப்பயிற்சியில் இளைஞர்களுடைய திறன் வளர்க்கப்பட்டு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பினை பெற்றவர்கள் இதனை ஒரு ஆரம்பமாக எடுத்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற வேண்டும். இதற்காக முழுமையாக உழைக்கவேண்டும். இந்த முகாமில் பணி ஆணைகளை பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் கலெக்டர்என்ற முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவதுமறைந்த முதலமைச்சர் அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும் 2017-18ம் ஆண்டு நிலை நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு வரியில்லாத நிதி நிலை அறிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றக்கூடிய அரசாக தொடர்ந்து செயல்படும். ஆகவே, நாம் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் ப.சுதாதேவி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொ) சு.ஆறுமுகம், உதவி திட்ட மேலாளர் என்.பழனிச்சாமி, நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் காமராஜ், உதவி திட்ட அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.