எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர்டி.பி.ராஜேஷ், மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிகை தொழிற்பயிற்சி மையத்தில் கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுவாழ்வு திட்டம் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மேலும், தொழில்துறை அமைச்சர் 39 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான நேரடி கடன்களை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் , இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தை முழு சுகாதாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்கும் நோக்கத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படும் நல்லூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்ககோயில் மற்றும் மங்கள+ர் ஊராட்சி ஒன்றியங்களில் 18 களப்பகுதிகளில் உள்ள 18 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் மாதிரி சுகாதார கழிப்பறை அமைக்க தலா ரூ.30500- வீதம் மொத்தம் ரூ.5.49 இலட்சத்தை 18 ஊராட்சிகளுக்கு வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் கடலூர் மாவட்டம் மாளிகைமேட்டை சேர்ந்த செல்வன் சக்திவேல் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.2000- மதிப்பிலான கழுத்து உதவி உபகரணத்தை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றியாதாவது, விருத்தாச்சலம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஒன்றியங்களை உள்ளடக்கி நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 2126 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். இம்முகாமில் 24 தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த வேலை வழங்கும் நிறுவனங்கள் மூலம் 967 இளைஞர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் 326 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமிற்காக தமிழக அரசு ரூ.1 இலட்சம் செலவிட்டுள்ளது. இன்று பணி நியமன ஆணை பெறும் இளைஞர்கள் அனைவரும் சம்பளத்தைப்பற்றி கவலைப்படாமல் மிகவும் பொறுப்போடு தங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனத்தின் முன்னேற்ற்திற்காக உழைக்கவேண்டும். சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு திட்டத்தின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அரசு இந்த அரசாகும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தற்பொழுது ரூ.18000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.1001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் படித்த இருபால் இளைஞர்களும் தங்கள் வேலை தொடர்பான தேடுதலை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முதலில் சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவதை ஒரு படியாக நினைத்து கடினமாக உழைத்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து அதிக சம்பளம் வழங்கும் நல்ல நிறுவனங்களை தேடி பணியாற்றவேண்டும். தொழில்துறையின் மூலம் 2017-18ம் ஆண்டில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பாகம் தயாரிப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழக அரசு மனித வளத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இன்று பணி நியமன ஆணைகளை பெறும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்காத மற்ற இளைஞர்களுக்கு அரசின் மூலம் அடுத்த வாய்ப்பினை உருவாக்கி தருவேன் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்கலெக்டர் பேசியதாவது,நமது நாட்டில் இந்தியாவிலேயே பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த வளர்ச்சியில் படித்த இளைஞர்கள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள். இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், சுய தொழில் தொடங்குவதற்காகவும் மறைந்த முதலமைச்சர் அவர்களால் Nநுநுனுளு திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் வீட்டில் இருக்காமல் வேலைவாய்ப்பினை தேடவேண்டும். மகளிர் திட்டம் மூலமாகவும், புதுவாழ்வு திட்டம் மூலம் பலவிதமான பயிற்சி அளிக்கிறார்கள். இப்பயிற்சியில் இளைஞர்களுடைய திறன் வளர்க்கப்பட்டு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பினை பெற்றவர்கள் இதனை ஒரு ஆரம்பமாக எடுத்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற வேண்டும். இதற்காக முழுமையாக உழைக்கவேண்டும். இந்த முகாமில் பணி ஆணைகளை பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் கலெக்டர்என்ற முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவதுமறைந்த முதலமைச்சர் அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும் 2017-18ம் ஆண்டு நிலை நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு வரியில்லாத நிதி நிலை அறிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றக்கூடிய அரசாக தொடர்ந்து செயல்படும். ஆகவே, நாம் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் ப.சுதாதேவி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொ) சு.ஆறுமுகம், உதவி திட்ட மேலாளர் என்.பழனிச்சாமி, நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் காமராஜ், உதவி திட்ட அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.