முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 ஒட்டன்சத்திரம்.- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகின்ற ஏப்ரல் 3-ந் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் முதன்மை திருவிழா பங்குனி உத்திரமாகும். இவ்விழாவிற்கு திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை,  கரூர், கோவை, நாமக்கள், தர்மபுரி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்து, முருகபெருமானுக்கு அபிசேகம் செய்வது வழக்கம். நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா வருகின்ற ஏப்ரல் 3-ந் தேதி திங்கள் கிழமை அன்று திருஆவினன் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.
இவ்விழா பகல் 12.30 மணிக்கு வள்ளி-தெய்வானை  சமேதரராக சப்பரத்தில் பட்டக்காரர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இரவு 8.00 மணிக்கு சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் சுவாமி புற்பாடு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யான நிகழ்ச்சி ஏப்ரல் 8-ந் தேதி சனிக்கிழமை அன்று இரவு 7.00 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அதன்பின் முத்துக்குமாரசுவாமி - வள்ளி-தெய்வானை மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9-ந் தேதி ஞாயிற்றுக்கிமை அன்று நடக்கவுள்ளது. அன்று காலை 4.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 6.00 மணிக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள்ளது.
விழா தொடர்ந்து காலை 11.00 மணிக்கு மேல் தேர் ஏற்றமும், மாலை 4.30 மணிக்கு மேல் கிரி வீதிகளில் தேர்ரோட்டமும் நடைபெறவுள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தம் பல்லக்கு, தங்கக்குதிரை, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சியும், குடமுழுக்கு  நினைவரங்கில் பக்திச் சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்;னிசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம்  உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்