முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்குடி வட்டம், அன்பில் ஊராட்சியில் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்: கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், அன்பில் ஊராட்சியில்நேற்று (19.03.2017) காலை 9.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் ஆகியோhர் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா என நேரில் பார்வையிட்டார்கள். ஜல்லிக்கட்டில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், கரூர், நாமக்கல், நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 610 காளைகள் பங்கேற்றது. இதில் 598 காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டது. 12 காளைகள் மருத்துவ பரிசோதனையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்துவக்குழுவினர் அனைத்துக் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை அடக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனைக்குப் பின்னர் 407 வீரர்கள் சீருடைகளுடன், காளைகளை அடக்க களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். விதிகளை பின்பற்றாத 6 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது. களம் இறங்கிய பல காளைகளுடன் வாலிபர்கள் களத்தில் நீண்ட நேரம் நின்று சீறி வந்த காளைகளை அடக்கினார்கள். இதில் காளைகளை அடக்கும் போது 12 வீரர்களுக்கு மட்டும் சிறுகாயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது. அன்பில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழக அரசு விதித்த விதிகளின்படி மிக சிறப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வரதராஜுலு, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் டாக்டர் இராஜேந்திரன், இலால்குடி வட்டாட்சியர் ஜவகர்லால்நேரு மற்றும் வருவாய்த்துறை, விலங்குகள் நலவாரிய பிரதிநிதிகள், பொதுப்பணிதுறை, தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் விழா குழுவினர்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago