முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் 222 பெண்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 05 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தங்கம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், சமூக நலத்துறை சார்பில் செம்பனார் கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 222 பெண்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 05 ஆயிரத்து 864 மதிப்பில் திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவி;யை கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவி;யினை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக அரசு, பல்வேறு நல்ல திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஏழை எளிய, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இந்த சமூக நலத் திட்டங்களுக்காக முன்பு ரூ.65000 கோடியாக இருந்த நிதியை தற்போது தமிழக அரசு ரூ.70,000 கோடியாக உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மா தொடங்கிய அனைத்துத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பெண்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் சிசுவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, புரட்சித் தலைவி அம்மா அறித்த திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம். அரசுப் பணியிலிருக்கும் பெண்களுக்கு 6 மாதமாக இருந்த பேறு கால விடுப்பை ஊதியத்துடன் கூடிய 9 மாத கால விடுப்பாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பள்ளி திறக்கும் நாளன்றே பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள் முதலியன வழங்கப்படுகின்றன. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணிணி, பேருந்து பயண அட்டை உட்பட அனைத்தும் வழங்கப்படுகின்றது. சமூக நலத்துறையின் சார்பில் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீ;ழ் இருவருக்கும் தலா ரூ.25,000 வீதம் அவர்தம் வங்கி கணக்கிலேயே வைப்பீட்டு தொகையாக செலுத்தப்படுகிறது. இத்தொகை 18 மாதங்களுக்குப் பின் தலா ரூ.40,000 மாக கிடைக்கிறது. பிறந்தபோதே அவர்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்குகின்ற வகையில் தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.25,000-ம் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.50000 ம் வழங்கப்பட்டு வந்தது. புரட்சித் தலைவி அம்மா தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல திருமங்கல்யத்திற்கு தங்கம் 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயத்தி வழங்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகரத் திட்டமாகும். இத்திட்டத்திற்காக ரூ.723 கோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு வறட்சி நிவாரணத்திற்காக ரூ.2247 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. தாய்மார்களின் கோரிக்கைக்கிணங்க 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏழை, எளிய சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.இன்யை தினம செம்பனார் கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், குத்தாலம ஒன்றியங்களை சேர்ந்த 222 பெண்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 05 ஆயிரத்து 864 மதிப்பில் திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தகைய நல்ல திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயர வேண்டும்" என தெரிவித்தார்..இவ்விழாவில்; பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், மயிலாடுதுறை, சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.ஜெயமீனா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்