முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு மரண தண்டனை: ஜாவித் மியான்தத் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி களின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சில பாகிஸ்தான் வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதைத்தொடர்ந்து முகமது இர்பான், ஷார்ஜில், காலித், நாசிர் ஜம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகிய வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத் துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ஜாவித் மியான்தத், தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து சூதாட்ட பிரச்சினைகளில் சிக்குவது வருத்தம் அளிக்கிறது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும்.

சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களை இனியும் அனுமதிக்கக் கூடாது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago