எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- தமிழகத்தில் பத்திரபதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் அங்கீகாரம் செய்யப்படாத மனைகளையோ, அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளையோ பத்திரபதிவு செய்யக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பத்திரபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்வி, மருத்துவம், திருமணம், கடன்கள் முதலியவற்றிற்கு தங்களின் சொத்துக்களை விற்பனை செய்து பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு 80 சதவீதம் குறைந்து தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான மறுவிசாரணை ரிட் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பத்திரபதிவு தொடர்பான வழக்கை முடிவு செய்வதற்காக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசின் சார்பில் கோர்ட்டில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக பத்திரபதிவு தொடர்பாக தேவையான விரிவான அறிக்கையையும் புதிய வரன்முறைகளையும் வகுத்து கோர்ட்டில் அளிக்க வேண்டும். பத்திரபதிவு மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அசன்அலியார் முன்னிலை வகித்தார். செய்தி தொடர்பாளர் செந்தில் வரவேற்று பேசினார். இதில் மாநில தலைவர் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செல்வன், மாவட்ட இணை செயலாளர் அபுதாகிர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் நிர்வாகி டி.கே.குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, அ.தி.மு.க. நிர்வாகி உச்சிப்புளி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் பேசியதாவது:- தமிழகத்தில் ரியல்எஸ்டேட்தொழில் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு நிலம் விற்பனையின் மூலம் அதனை விற்பவர் அந்த தொகையை பல்வேறு செலவுகளுக்கு பயன்படுத்துவார். அதன்மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கிறது. 5 சென்டு நிலத்தினை வாங்குபவர் அதில் 2 ஆயிரத்து 180 சதுர அடியில் ஒரு வீடுகட்டும்பொழுது பல பொறியாளர்கள், அதனை கட்டி முடிக்க தேவைப்படும் 536 வேலை நாட்களுக்கான கொத்தனார்கள், ஆயிரத்து 508 வேலை நாட்களுக்கான சித்தாள்கள், மற்றும் இதர தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என 4 ஆயிரத்து 360 நபர்கள் பயனடைகிறார்கள். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பயனடையும் ரியல் எஸ்டேட் தொழில் தற்போது முடங்கிபோய் உள்ளது. அதேபோல 8 சதவீத முத்திரை தாள் மூலம் ஒரு ஏக்கர் நிலம் பத்திரபதிவு செய்தால் அரசுக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதுபோல, தமிழகம் முழுவதும் ஒருநாளுக்கு 360 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்மூலம் ரூ.14 கோடியே 76 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது.
கடந்த 2015-16ல் பத்திரபதிவு மூலம் அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை அரசுக்கு ரூ.324 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஏற்பட்டுள்ள தெளிவாக தெரிகிறது. எனவே, பத்திரபதிவிற்கான தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சென்னை ஏரிகளில் நீர் இருப்பு பாதியாக சரிவு
23 Apr 2024சென்னை, கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.