எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- தமிழகத்தில் பத்திரபதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் அங்கீகாரம் செய்யப்படாத மனைகளையோ, அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளையோ பத்திரபதிவு செய்யக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பத்திரபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்வி, மருத்துவம், திருமணம், கடன்கள் முதலியவற்றிற்கு தங்களின் சொத்துக்களை விற்பனை செய்து பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு 80 சதவீதம் குறைந்து தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான மறுவிசாரணை ரிட் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பத்திரபதிவு தொடர்பான வழக்கை முடிவு செய்வதற்காக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசின் சார்பில் கோர்ட்டில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக பத்திரபதிவு தொடர்பாக தேவையான விரிவான அறிக்கையையும் புதிய வரன்முறைகளையும் வகுத்து கோர்ட்டில் அளிக்க வேண்டும். பத்திரபதிவு மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அசன்அலியார் முன்னிலை வகித்தார். செய்தி தொடர்பாளர் செந்தில் வரவேற்று பேசினார். இதில் மாநில தலைவர் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செல்வன், மாவட்ட இணை செயலாளர் அபுதாகிர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் நிர்வாகி டி.கே.குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, அ.தி.மு.க. நிர்வாகி உச்சிப்புளி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் பேசியதாவது:- தமிழகத்தில் ரியல்எஸ்டேட்தொழில் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு நிலம் விற்பனையின் மூலம் அதனை விற்பவர் அந்த தொகையை பல்வேறு செலவுகளுக்கு பயன்படுத்துவார். அதன்மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கிறது. 5 சென்டு நிலத்தினை வாங்குபவர் அதில் 2 ஆயிரத்து 180 சதுர அடியில் ஒரு வீடுகட்டும்பொழுது பல பொறியாளர்கள், அதனை கட்டி முடிக்க தேவைப்படும் 536 வேலை நாட்களுக்கான கொத்தனார்கள், ஆயிரத்து 508 வேலை நாட்களுக்கான சித்தாள்கள், மற்றும் இதர தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என 4 ஆயிரத்து 360 நபர்கள் பயனடைகிறார்கள். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பயனடையும் ரியல் எஸ்டேட் தொழில் தற்போது முடங்கிபோய் உள்ளது. அதேபோல 8 சதவீத முத்திரை தாள் மூலம் ஒரு ஏக்கர் நிலம் பத்திரபதிவு செய்தால் அரசுக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதுபோல, தமிழகம் முழுவதும் ஒருநாளுக்கு 360 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்மூலம் ரூ.14 கோடியே 76 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது.
கடந்த 2015-16ல் பத்திரபதிவு மூலம் அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை அரசுக்கு ரூ.324 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஏற்பட்டுள்ள தெளிவாக தெரிகிறது. எனவே, பத்திரபதிவிற்கான தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.