முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 101 பயனாளிகளுக்கு ரூ.23.23 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன்,, தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நாங்குநேரி வட்டம், நாங்குநேரி கிராமத்தைச் சார்ந்த சங்கர் என்பவர் கட்டட வேலைக்கு சென்றபோது சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்த அன்னாரின் மனைவி ஈஸ்வரிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும், விஜயநாராயணம் குறுவட்டம், விஜயநாராணயம் பகுதி-2 கிராமத்தைச் சார்ந்த ராமன் என்பவர் பசுமாடு மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி அன்னாரின் பசுமாடு இறந்த வகைக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையினையும், பாளையங்கோட்டை வட்டத்தைச் சார்ந்த 2 பயனாளிகளுக்கும், திருநெல்வேலி வட்டத்தைச் சார்ந்த ஒரு பயனாளி ஆக மொத்தம் 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் சங்கரன்கோவில் வட்டத்தைச் சார்ந்த 7 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 6 நபர்களுக்குரூ.4.50 இலட்சம் மதிப்பில் தீருதவித் தொகைகளையும், ஆலங்குளம் வட்டம் குத்தபாஞ்சான், ஆண்டிப்பட்டி மற்றும் மருதம்புத்தூர் ஆகிய 2 கிராமங்களில் உள்ள 79 பயனாளிகளுக்கு ரூ.16,93,125/- மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும், ஆக மொத்தம் ரூ.23,23,125/- இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் கலெக்டர் மு.கருணாகரன்,, வழங்கினார்கள்.முன்னதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் மற்றும் உயர் அலுவலர்கள் பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விரைவில் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஆர்.விஜயலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ். நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, ஆலங்குளம் வட்டாட்சியர் சுப்புராயன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago