எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சிறந்த பராமரிப்புக்கான விருதை நெல்லை அதிவிரைவு ரயில் பெற்றுள்ளது. இதற்காக பாராட்டுச் சான்றிதழும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் நெல்லை பராமரிப்புப் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-சென்னைக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை அதிவிரைவு ரயில், தெற்கு ரயில்வே துறைக்கு அதிக வருவாய் பெற்றுத்தரும் பிரதான ரயில்களில் ஒன்றாகும். இதில், 7 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொது பெட்டிகள், 2 ரயில்வே ஊழியர் பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. மதுரை கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள பராமரிப்பு நிலையத்தில் (பிட்லைன்) நெல்லை அதிவிரைவு ரயில், பிலாஸ்பூர் விரைவு ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன.தெற்கு ரயில்வே பொறியியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற சிறந்த ரயில் பராமரிப்புக்கான தேர்வில் மதுரை திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, சேலம், திருச்சி கோட்டங்களில் இருந்து தலா ஒரு விரைவு ரயில் போட்டியில் பங்கேற்றது. இதில் நெல்லை அதிவிரைவு ரயில் சிறந்த பராமரிப்புக்கான விருதைப் பெற்றது. இதற்காக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசையும், பாராட்டுச் சான்றிதழையும் தட்டிச் சென்றது.பெட்டிகளில் புதுமைகள்: இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது: நெல்லை அதிவிரைவு ரயிலில் பெட்டி எண், இருக்கை எண் குறிப்பிடுதல், தீயணைப்புக் கருவி இருப்பிடம், அவற்றை உபயோகிக்கும் முறை, பாதுகாப்பு ஜன்னல் பாதை, ரயில் பெட்டியை அதிக அழுத்தத்தில் தண்ணீர் அடித்து சுத்தப்படுத்துதல் ஆகிவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு ரயில் பெட்டியில் 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 தண்ணீர் தொட்டிகள் அமைத்து பராமரிக்கப்படுகிறது. கரப்பான், எலி, மூட்டைப்பூச்சி உள்ளிட்டவற்றின் தொல்லையைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.பயணிகளுக்கு அக்கறை தேவை: திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளர் கல்யாணி கூறியதாவது: நெல்லை அதிவிரைவு ரயிலுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருநெல்வேலி பராமரிப்புக் குழுவினரின் துரித பணிகள் பாராட்டுக்குரியதாகும். உணவுப் பொருள்களை பெட்டிகளுக்குள் கொட்டிவிட்டு அப்புறப்படுத்தாமல் செல்வது போன்றவற்றை கைவிட்டு, ரயில்களின் பராமரிப்பு விஷயத்தில் பயணிகளும் அக்கறை காட்ட வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே துறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.அந்த வகையில் மனிதக்கழிவுகள் பாக்டீரியா மூலம் மட்கிப்போகும் விதத்தில் பயோ கழிவறைகள் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் காகிதம் உள்ளிட்டவற்றை போடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், சில பயணிகள் இதைக் கடைப்பிடிப்பதில்லை. விதிமீறல்களை ரயில் பயணிகள் கைவிட்டால் பராமரிப்பு மேலும் சிறப்பாக அமையும் என்றார் அவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.