எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், திண்டல் யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள்.
சேர்க்கை அதிகரிப்பு
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி தெரிவித்ததாவது,மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியோடு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதன்பேரில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தக பை, சீருடை, வண்ண பென்சில்கள், வரைகலை பெட்டி, மிதிவண்டி, மடிக்கணினி, காலணி உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி வகுப்பறைகள் நல்ல சூழலில் அமைந்திருக்க வேண்டும். பள்ளிகளில் பசுமை மன்றங்கள், தேசிய பசுமைப் படைகள் போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சியில் மாநிலத்திலே முதலிடம் பெற்றுள்ளது. நடப்பாண்டிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலும் முதல் இடத்தை பெறுவதற்கு ஆசிரியர் பெருமக்கள் ஆகிய நீங்கள் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பான முறையில் கல்வியினை அளித்து தமிழகத்திலே கல்வியில் ஒரு புரட்சியினை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்வியினை போதித்து கல்வியின் தரத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதன்பேரில் தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டம் 100 சதவீதம் பெற்று கல்வியில் முதல் மாவட்டமாக திகழ்வதற்கு ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் அல்லும் பகலும் இடைவிடாது உழைத்திட வேண்டும். கல்வி கற்றலில் இடைநிற்றல் இல்லாமல் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அதிக மதிப்பெண்கள் பெற்று எதிர்காலத்தில் சமுதாயத்தில் நல்ல ஒரு அங்கம் வகிப்பதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டு இவ்விழாவில் பரிசு பெறும் தலைமையாசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார்.
அமைச்சர் கருப்பணன்
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா கல்விக்கு என ஆண்டுதோறும் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். எந்தத் துறைக்கும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ, மாணவியர்களது கல்வித்திறன் மேம்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் அரசின் சார்பில் நான்கு செட் சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, உலக வரைபடம், புத்தகப்பை, காலணிகள், மடிக்கணினிகள் ஆகிய அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வியில் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு கல்வி செலவின சுமையை ஏற்படுத்தாமல் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா கல்வித்துறையில் பல்வேறு விலையில்லா பொருட்களை வழங்கியுள்ளார்கள். இவை அனைத்தும் பெற்றாலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆசியராகிய நீங்கள் வழங்கும் கல்வி அறிவே சிறப்பானதாக அமையும். நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில், அந்த இளைஞர்களை இன்றைய ஆசியர்கள் நல்லமுறையில் கல்வி கற்பித்து சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 பேர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் 94 பேர், 2016-2017 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 116 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 204 சுயநிதி, மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த அரசு நிதி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசரியர்கள் 2,548 நபர்கள் என மொத்தம் 2,974 நபர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள்
இவ்விழாவில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி, (மொடக்குறிச்சி)இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), ஈஸ்வரன் (பவானிசாகர்), மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிச்சாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச்சாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், வருவாய் கோட்டாட்சியர் நர்மதாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (கோபி) ரா.கலைச்செல்வின், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் த.ஆறுமுகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் இரா.ரமேஷ், யு.ஆர்.சி. மெட்ரிக் பள்ளி தாளாளர் கே.சரஸ்வதி உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.