எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கச்சத்தீவை மீட்க உச்சநிதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆனால், தி.மு.க. என்ன செய்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் காட்டமாக கேட்டார். மேலும், கச்சத்தீவு பிரச்சனையில் துரோகம் செய்தது யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் ஆவேசமாக தெரிவித்தார்.
கவனஈர்ப்பு தீர்மானம்
இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது குறித்தும் நேற்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
தி.மு.க.வினர் எதிர்ப்பு
சமீபத்தில் நடந்த கொடூரமான தாக்குதலில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். மீனவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவது பற்றி எல்லாம் ஸ்டாலின் கூறினார். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டபோது ஸ்டாலின் உட்பட தி.மு.க.வினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1974-ம் ஆண்டு என்றுதானே நான் சொன்னேன். அதற்கு ஏன் இப்படி எழுந்து நின்று கூச்சல் எழுப்புகிறீர்கள். நான் யாரைப் பற்றியும் எந்த கட்சி பற்றியும் குறிப்பிடவே இல்லையே? 1974 என்றதும் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார்.
அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு அமைச்சர் யாருடைய பெயரையும், எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே அனைவரும் அமைதியாக உட்காருங்கள் என்று கூறினார். அப்போது ஸ்டாலின் எழுந்து நான் இந்த பிரச்னையில் அரசியல் எதையும் கலக்கவில்லை. மீனவர் தாக்கப்படுவது குறித்துதான் பேசினேன். ஆனால் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று கூறுகிறார். அப்போது தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது என்றும் கூறினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு உங்கள் கட்சி பெயரை அமைச்சர் கூறவில்லை. அப்படி அவர் சொல்லி இருந்தால் நீங்கள் விளக்கமளிக்கலாம். அவர் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்றுதானே சொன்னார். உங்கள் கட்சி பெயரை அமைச்சர் சொல்லவில்லையே என்று கூறினார்.
தி.மு.க.வினர் மீண்டும் கூச்சல்
மீண்டும் தி.மு.க.வினர் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள். இதற்கிடையில் அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து பேசினார். நான் வரலாற்று குறிப்புகளைத்தான் சொன்னேன். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உங்கள் கட்சி தலைவர் பற்றியும் சொல்லவில்லை. இதற்கு நீங்கள் கோபப்படத் தேவை இல்லையே. 1974-ம் ஆண்டு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று ஜெயக்குமார் கேட்டார். மீண்டும் ஸ்டாலின் எழுந்து பேசினார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவு பிரச்சினை எழுந்தபோது கருணாநிதி அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. அதனை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என்று கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கச்சத்தீவு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது என்று ஸ்டாலின் கூறினார்.
துரோகம் செய்தது யார்?
உடனே அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து கச்சத்தீவை மீட்க அம்மா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஜெயலலிதா உறுதியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். 1998-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீங்கள் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபின் இதுபோன்று வழக்கு தொடர்ந்தீர்களா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேட்டார். கச்சத்தீவு பற்றி அம்மா பலமுறை இந்த மன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு பிரச்சினையில் யார் துரோகம் செய்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று ஜெயக்குமார் கூறினார்.
கடந்த 17-ம் தேதி அன்று டெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நானும், அமைச்சர்களும் சந்தித்து தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது பற்றியும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசினோம் என்று ஜெயக்குமார் கூறினார். மத்திய அமைச்சரிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
மீனவர்களை சுடக்கூடாது
நமது எல்லைக்குள் தமிழக மீனவர்கள் அமைதியாக மீன்பிடிக்கும்போது காற்றின் வேகம் காரணமாகவும், திசை மாறுவதாலும் கற்பனை எல்லைக்கோட்டை தாண்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலை ஏற்பட்டால் மீனவர்களை தாக்கக்கூடாது, சுடக்கூடாது, வலைகளை அறுக்கக்கூடாது. அப்படியே மீனவர்கள் பிடிபட்டாலும் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
முதலாவதாக, பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடிக்க மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். 2-வதாக தமிழக மீனவர்களை சிறை பிடிக்கக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, சுடக்கூடாது என்று கோரிக்கை வைத்தோம். 3-வதாக ஏற்கனவே பிடிபட்ட 128 விசைப்படகுகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று கோரினோம்.
பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க விசேஷ தொகுப்பாக 1,664 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று பிரதமரிடம் ஏற்கனவே அம்மா வலியுறுத்தி இருந்தார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சுடப்படுவது நிச்சயம் தடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.