எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்ற அதிபர் டிரம்பின் முழக்கம் இந்தியாவில் இருந்து அமெரிக்கவிற்கு பணியாற்ற சென்றவர்களை அதிகமாகவே பாதித்து வருகிறது. இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது ஒருபக்கம் இருக்க இந்திய திருமண சந்தையில் அவர்களுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு ஹெச் 1பி விசா வழங்குவது ரத்து செய்யப்படும் என்று சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தற்போது, ஹெச் 4 விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கணவன் அல்லது மனைவியுடன் செல்பவர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசா வழங்கப்படுகிறது. தற்போது இந்த விசாவுக்கும் அமெரிக்கா கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், ஹெச் -4 விசா பெற்று பணியாற்றி வருபவர்களின் வேலைக்கான அதிகாரத்தை 60 நாட்களுக்கு முடக்கி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடு ஒருபக்கம், மறுபக்கம் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் சிலிக்கான் வேலி போன்ற இடங்களில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி பணியாளர்கள் சில மாத விடுமுறைக்கு இந்தியா வந்து இங்குள்ள மணமகள்களை திருமணம் செய்து கொண்டு செல்வார்கள். அமெரிக்க மாப்பிள்ளையேதான் வேண்டும் என்று காத்திருக்கும் இந்திய மணமகள்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
குறையும் மவுசு
சமீபகாலமாக இந்தியர்கள் மீதான இனவெறி குற்றங்கள், வன்முறைகள் அமெரிக்காவில் பரவி வருகின்றன. இதனால் இதுவரை வரை அமெரிக்க மாப்பிள்ளைகளைத் தேடி வந்த இந்திய பெண்களின் பெற்றோர்கள், தற்போது அந்த மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளனர். திருமண இணையதளங்களும் இதை உறுதி செய்கின்றன.
திருமண இணையதளங்கள்
கடந்த 2 மாதங்களாக அமெரிக்க மாப்பிள்ளைக்கான வரன் தேடுதல் 25 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார் திருமண வரனுக்கான ஷாதி டாட் காம் என்ற இணையதளத்தின் மேலாளர் ரிச்சா கர்க் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முதலே அமெரிக்க மாப்பிள்ளைக்களுக்கான மவுசு குறையத் தொடங்கினாலும், பிப்ரவரியில் மிக அதிக அளவில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய குடியுரிமை கொள்கைகளைக் கண்டு, இந்தியப் பெண்களின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். தவிர அங்கு பெருகிவரும் இனவெறி சம்பவங்களும் அவர்களை அச்சப்பட வைத்துள்ளது என்றும் திருமண தகவல் மைய இணையதள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்
50 சதவிகிதம் சரிவு
ஜனவரி மாதம் முதல் அமெரிக்க மாப்பிள்ளையை வரனாக தேடும் பெற்றோர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை சரிந்துவிட்டது. திடீரென நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார் மற்றொரு மேட்ரிமோனி டாட் காம் நிறுவத்தின் இயக்குநர்.
இந்தியா திரும்பினால் பெண்
மத்திய டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான விஜய் சிங் தனது மகளுக்காக கடந்த ஓராண்டாக அமெரிக்க மாப்பிள்ளையைத் தேடி வந்தார். தற்போதைய சூழ்நிலையில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்ட அவர், இந்தியா வர விரும்பும் மாப்பிள்ளைக்கே தனது பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
அமெரிக்கா போக விருப்பமில்லை
அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் பெண் தேடும் பெரும் பணக்காரர்களுக்கு பெண் கிடைப்பது கடும் சிரமமாக இருக்கிறது. காரணம் மணமகள்கள் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. திருமணம் செய்து கொண்டு இந்தியாவிலேயே வசிக்க விரும்பினால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று கூறி வருகின்றனர்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.