முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பெண் இன்ஜினியர் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

தஞ்சாவூர்  - மதுரையைச் சேர்ந்த பெண் பொறியாளர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுரை தெப்பக்குளம் காவல் ஆய்வாளராக சேதுமணி மாதவன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2007-ம் ஆண்டு தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது அகிலாண்டேஸ்வரி என்ற மென்பொருள் பொறியாளர் ரூ. 2 லட்சம் பண மோசடி செய்ததாக பாலு என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அகிலேண்டேஸ்வரியை விசாரணைக்கு அழைத்து சென்ற சேதுமணி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக சேதுமணி வழக்கு பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அகிலாண்டேஸ்வரியின் தாய் புகாரை ஏற்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் சேதுமணிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago