முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் கலைவிழா கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      கடலூர்

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைவிழா, சிறந்த இளைஞர் மன்ற விருது மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் , மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்வு செய்யப்பட்ட பண்ருட்டி ஒன்றுப்பட்ட இளையோர் மன்றத்திற்கு ரொக்கப்பரிசாக ரூ.25,000- மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலும் கலெக்டர் , மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்வு செய்யப்பட்ட 50 இளைஞர் மன்றங்களுக்கு ரூ.3,000- மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, மாவட்ட கலைவிழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கி தலைமையுரையாற்றினார். முன்னதாக நேரு யுவகேந்திரா கணக்காளர் சக்கரவர்த்தி விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று விழாவின் நோக்கம் குறித்து விளக்கினார். நிறைவாக தேசிய இளையோர் தொண்டர் மகேஷ் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) நாகலட்சுமி, மாவட்ட தொழில்மைய உதவி இயக்குநர் லட்சுமி, நாட்டுநலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் மற்றும் இளைஞர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்; கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்