முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா ஊழலில் முதலிடம் - முன்னேற்றத்திலும் முதலிடம் சந்திரபாபு நாயுடு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

நகரி  - இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஊழலில் முதலிடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் முன்னேற்றத்திலும் முதலிடத்தில் உள்ளதாக சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் பேச்சு
ஆந்திர சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். அவர் 2 மணி 51 நிமிடம் இடைவிடாமல் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஊழலில் முதலிடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் முன்னேற்றத்திலும் முதலிடத்தில் உள்ளது” என்று கூறினார்.

கடுமையாக தாக்கி ...
இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் தனது மாநிலத்தில் ஊழல் நடக்கிறது என்று சட்டசபையில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 3 எம்.எல்.சி. தேர்தலில் தெலுங்கு கட்சி வெற்றி பெற்றதால் உற்சாகமாக இருந்த அவர் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையான வார்த்தைகளால் பேசினார்.

கடப்பாவில் தோல்வி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடாவடிதனத்தில் ஈடுபடுகிறீர்கள். உங்களை விரைவில் அடக்குவேன் என்று காட்டமாக பேசினார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தினர் தொடர்ந்து வெற்றி பெற்று கடப்பாவில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் ஜெகனின் சித்தப்பா விவேகானந்தன் தெலுங்குதேசம் வேட்பாளர் ரவியிடம் தோற்றார்.

உரிமை மீறல் நோட்டீசு
இதுபற்றி சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘கடப்பாவில் உங்கள் (ஜெகன்) குடும்பத்தை தோற்கடித்து விட்டோம். இனி முழுமையாக விரட்டுவோம்’ என்றார்.இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் பேச்சை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அவர் மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீசு கொடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்