முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் ம.தி.மு.க மதுஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், நகர ம.தி.மு.க செயலாளர் அனிதா.வி.பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மதுஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் கதிரேசன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழகம் முழுவதிலும் மதுஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகளை நடத்திட வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மதுஒழிப்பு விழிப்பு பேரணிகளின் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மாவட்ட ம.தி.மு.க சார்பில் மாபெரும் மதுஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் நகர ம.தி.மு.க செயலாளர் அனிதா.வி.பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மதுஒழிப்பு பேரணியை மதுரை தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயலாளர் கதிரேசன்,திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பிருந்து தொடங்கி வைத்து மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்திசிலை பகுதியில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட ம.தி.மு.க.வினர் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.இந்த பேரணியில் நகர அவைதலைவர் திருப்பதி,கட்சி நிர்வாகிகள் சக்திவேல்,சீனிவாசன்,வையத்துரை,ரமேஷ்,சிவனாண்டி,புஷ்பலதா,ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்