முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதவரத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை : ஆர்.டி.ஓ விசாரணை

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      சென்னை

சென்னை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு அய்யப்பன்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் சென்னை கோயம்பேட்டில் இருசக்கர வாகன உதிரிகள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி(வயது27) இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு கை குழந்தை உள்ளது. மணிகண்டன் வாரத்திற்கு ஒரு முறை இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வருவாராம் இதை இந்துமதி கண்டிப்பதால் அடிகடி தகராறு ஏற்பட்டு சாமதானம் ஆகிவிடுவார்கள் இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் பகலிலேயே மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்தாக கூறப்படுகிறது.

தீ காயங்கள்

 இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மணிகண்டன் படுக்கை அறையில் சென்று துங்கிவிட்டார். கை குழந்தையை மணிகண்டன் அருகில் படுக்க வைத்துவிட்டு வீட்டில் உள்ள மண்ணென்னையை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். ஏறிந்து கொண்டு அலறியபடி ஒடிந்த இந்துமதியை அங்கிருந்தவர் தீயை அனைத்து தீ காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த இந்துமதி பரிதாபமாக செத்தார். இதுகுறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குபதிவு செய்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் அம்பத்தூர் ஆர்.டி.ஓ(கோட்டாட்சியர்) இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார். 6 மாத கை குழந்தையை விட்டுவிட்;டு இறந்த போன சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்