முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் - கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காவிரி வழக்கில் அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரை, தமிழகத்திற்கு தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பவானி ஆற்றின் குறுக்கே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறும் வகையில் கேரள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா கடிதம்

கேரள மாநிலம் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பாசன திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்காக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீட்டு குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை செயல்பாட்டுக்கு வரும் வரையில், கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் காவிரி பாசனப்பகுதிகளில் எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தாக்கல் செய்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

மறு ஆய்வு செய்யக்கோரி ...

இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களை மறு ஆய்வு செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பவானி மற்றும் சிறுவாணி ஆறுகளில் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும், கேரள அரசு கூடுதல் தண்ணீரை பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கேரள அரசுக்கு உத்தரவு

இதனையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறும் வகையில், கேரள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதற்கான உறுதிமொழியை கேரள அரசு அளிக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர். இதனை ஏற்று, கேரள அரசின் வழக்கறிஞர், அதற்கான உறுதிமொழியை சுப்ரீம் கோர்ட்டில் வழங்கினார். இந்த உறுதிமொழியை உடனடியாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்துமாறு நீதிபதிகள் கேரள அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

கர்நாடகத்திற்கு உத்தரவு

இதனிடையே, காவிரியில் அடுத்த உத்தரவு வரும்வரை, தொடர்ந்து நாள்தோறும் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜூலை மாதம் 11-ம் தேதி முதல் நாள்தோறும் நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago