முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் : அதிமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் . டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் துணைப் பொதுச் செயலாளர்.டிடிவி தினகரன், நேற்று அதிமுக தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில், துணைப் பொதுச் செயலாளர். டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்றார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த . டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என, துணைப் பொதுச் செயலாளர் த டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற தலைமைத் தேர்தல் பணிமனையை முதலமைச்சர் . எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், துணைப் பொதுச் செயலாளர்.டிடிவி தினகரன் மற்றும் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்