முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் தாய்த்தமிழ் பள்ளி ஆண்டு விழா

புதன்கிழமை, 22 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் இரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு திருவள்ளுவர் கழக தலைவர் சுப்பையா தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் இந்திய மக்கள் நாடக மன்ற தலைவர் கைலாசமூர்த்தி, கதிர்முருகன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளி நிர்வாகி அண்ணாவியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.  தலைமை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.  நிகழ்ச்சியில் இயற்கை வேளாண் பண்ணை நிர்வாகிகள் பாண்டியன், சொர்ணவேல், ஆசிரியர்கள் இளங்கோ கண்ணன், நிலவழகன், நாராயணன், முத்துலெட்சுமி, சங்கர்ராம் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலைமை ஆசிரியர் கந்தசாமி, தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.  முன்னதாக பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.  கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சங்கரன், மகேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.  முடிவில் ஆசிரியர் ஜெயராணி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்