முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய திருத்தப்பட்ட ஊதிய பட்டியல் - 'ஏ' பிரிவுக்கு முரளி விஜய், புஜாரா, ஜடேஜா முன்னேற்றம்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் ஒப்பந்த வீரர்களுக்கான புதிய திருத்தப்பட்ட ஊதிய பட்டியலை பி.சி.சி.ஐ நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் 'ஏ' பிரிவிற்கு முரளி விஜய், புஜாரா, ஜடேஜா போன்ற வீரர்களை கொண்டு வந்துள்ளது.

புதிய பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், ஒப்பந்த வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது. சில வீரர்களை ஏ பிரிவுக்கு தரம் உயர்த்தியுள்ளது. நேற்று வெளியிட்ட புதிய திருத்தப்பட்ட பட்டியலில் கூறியுள்ள தகவல்படி, ஏ பிரிவு வீரர்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ பிரிவில், டோனி, கோலி, ரஹானே, அஸ்வின் ஆகியோரை தவிர இந்த வருடம் புதிதாக முரளி விஜய், புஜாரா மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும் இணைந்துள்ளனர்.

சம்பளம் உயர்வு

ஏ கிரேட் வீரர்களின் ஊதியம், கடந்த ஆண்டு ரூ.1 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கிரேட் பி பிரிவில் 9 வீரர்கள் உள்ளனர். ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், விருதிமான் சாஹா, ஜஸ்ப்ரிட் பும்ரா, யுவராஜ்சிங் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

ராகுல், பும்ரா முன்னேற்றம்

சி பிரிவிலிருந்த ராகுல், பும்ரா, யுவராஜ், விருதிமான் சாஹா போன்றோர் பி பிரிவுக்கு இந்த வருடம் முன்னேறியுள்ளார்கள். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தவான் ஆகியோர் பி பிரிவிலிருந்து சி பிரிவுக்கு கீழே போயுள்ளனர். விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் புரமோஷன் பெற்று ஏ பிரிவுக்கு போயுள்ளனர். பி, பிரிவிலுள்ள வீரர்களின் சம்பளம் ரூ.1 கோடியாகும்.

'சி' பிரிவில் 16 வீரர்கள்

தவான், ராயுடு, அமித் மிஸ்ரா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கருண் நாயகர், ஹர்திக் பாண்ட்யா, நெஹ்ரா, கேதர் ஜாதவ், பார்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், மன்தீப் சிங், தவல் குல்கர்ணி, சர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் ஆகிய 16 வீரர்கள் சி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் ஊதியம் ரூ.50 லட்சமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்