முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது: சட்டசபையில் மசோதா தாக்கல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளின் விலையை உயர்த்த வகை செய்யும் சட்டமசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 16-ம் தேதி நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு 20-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நான்காவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை 5 சதவீதம் வரையில் உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வீரமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநில வருவாயை பெருக்கும் வகையில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது என அமைச்சர் வீரமணி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்