எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 20.03.2017 அன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்ட இருப்பு 5.30 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்ட இருப்பு 10.85 அடியும், சிற்றார்-1 அணையின் நீர்மட்ட இருப்பு 0.89 அடியும், சிற்றார்-2 அணையின் நீர்மட்ட இருப்பு 0.98 அடியும், பொய்கை அணையின் நீர்மட்ட இருப்பு 2.60 அடியும், மாம்பழத்துறையாறு நீர் மட்ட இருப்பு 24.52 அடியும் உள்ளது.20.03.2017 அன்று வரை வேளாண் விரிவாக்க மையம் மூலம் 245.545 (மெ.டன்) பரப்பில் நெல் பயிறு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 01.04.2016 முதல் 20.03.2017 முடிய 20,279 நெட்டை ரக தென்னங்கன்றுகளும், 19,035 நெட்டை குட்டை ரக தென்னங்கன்றுகளும், 1,169 குட்டை நெட்டை ரக தென்னங்கன்றுகளும் ஆக மொத்தம் 40,483 தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி உரம் விநியோகிப்பதற்காக டான்பெட் நிறுவனத்தில் 242 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு சங்கங்களில் 2,224 மெட்ரிக் டன்னும், தனியார் விற்பனையாளர்களிடம் 443 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 2,909 மெட்ரிக் டன் உரம் இருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பதில்கள் வாசிக்கப்பட்டது. உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதியில் உள்ள செம்மன்குளம் என்ற தம்புரான்குளம், கோடாக்குளம் ஆகிய குளங்களை வரும் நிதியாண்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளும்போது முன்னுரிமை அளித்து, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், கக்கோட்டுதலை ஊரில் உள்ள தெரண்டான்குளம் அளந்து, எல்கை நிர்ணயம் செய்ய கேட்டு, கல்குளம் வட்டாட்சியர் அவர்களுக்கு 10.03.2017-ல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. வருவாய் துறை அளவையரால் உதவி பொறியாளர் முன்னிலையில் மேற்குறிப்பிடும் குளம் அளந்து, எல்கை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்பு குறித்த வரைபடம் மற்றும் படிவம்-1 வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட பின், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவர் குளத்தின் மறுகால் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யும் பணிக்கு ரூ.3.00 இலட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்பளிப்பு பெறப்பட்ட பின் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.கொல்வேல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், பங்குத்தொகை செலுத்தி, கடன் கோரி விண்ணப்பிக்கும் பட்சத்தில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பத்மநாபபுரம், புத்தனாறு கால்வாய் மற்றும் அதன் கிளைக்கால்வாய்களை நபார்டு திட்டத்தில் புனரமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒப்புதல் பெற்று, பணி மேற்கொள்ளப்படும் எனவும், வறட்சியை எதிர்கொண்டு கால்நடை வளர்ப்போர்களுக்கு உலர்தீவனம் விநியோகம் செய்வதற்காக கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் தோவாளை, அழகப்பபுரம், திங்கள்நகர், செம்மங்கலா ஆகிய கால்நடை மருந்தகங்களில் தீவன கிட்டங்கிகள் அமைத்து, மானிய விலையில் உலர் தீவனம் விநியோகம் செய்ய, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், முளங்குழி பகிர்மான கால்வாய் வரும் நிதி ஆண்டில், நிதி நிலைகளுக்கேற்ப முன்னுரிமை அளித்து சீரமைக்கப்படும். மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்ற விளவங்கோடு வட்டாட்சியர் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வரைப்படம் மற்றும் படிவம் பெறப்பட்டவுடன் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் எனவும், பறக்கை ஊராட்சிக்குட்பட்ட பாசனக்கால்வாய்களின் பக்கச்சுவர் இடிந்ததை சரிசெய்ய, சிறப்பு நிதிகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், திக்கணங்கோடு கால்வாயில் ஆண்டுதோறும் தூர்வாரப்பட்டு, ஒருமாவிளை, கருக்கன்குழி, பாட்டவிளை, சேனம்விளை, படுவாக்கரை, கொடுமுட்டி, வறுத்தான்விளை, பெத்தேல்புரம் ஆகிய பகுதிகளுக்கு பாசனத்திற்கு முறையாக சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது எனவும், அருவிக்கரை வலதுகரை கால்வாய் கடந்த நிதியாண்டு தூர்வாரப்பட்டு, விவசாயத்திற்கு சாரூர்குளம் வரை தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், அருவிக்கரை வலதுகரை கால்வாயில் மூன்று இடங்களில் நீர் ஒழுக்குகளை அடைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், சாரூர் குளத்தை தூர்வார மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், திற்பரப்பு அணை மற்றும் பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் அணைகள் திறக்கப்படும் எனவும், முட்டம் நீட்சிப்புக்கால்வாய் 3-வது மடையில் உள்ள அடைப்புகள் விரைவில் சரி செய்யப்படும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை (பொ)) சந்திரசேனநாயர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை (நீர் ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் பொறி சுப்பிரமணியன், வட்டாட்சியர்கள், செயல் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: